தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மையே சேவை என்ற இயக்கம் கடந்த 15-ம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கமானது 15-ம் தேதி முதல் காந்தியின் பிறந்த நாளான 02.10.2017 வரையில் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி சார்பில் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மையே சேவை பணி தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று (29.09.2017) காலை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 36வது வார்டு பகுதியான கொடிசியா மைதானத்தின் அருகில் உள்ள கோவை இஸ்கான் கோவில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு கோவிலை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தூய்மை பாரத இயக்கத்தின் நோக்கமானது, தூய்மை பாரத இயக்கம் சார்ந்தப் பணிகளை அனைத்து நிலைகளிலும் ஒவ்வொரு இந்திய பிரஜையும், இப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து பொது மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ளாட்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், உள்ளுர் முக்கிய பிரமுகர்கள், தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர்கள் மூலம் பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

வீடுகள், சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும் துப்புறவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்பினரால் சுத்தமாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழச்சியில், கோவை மாவட்ட கிழக்கு மண்டல உதவி ஆணையர் ராம்குமார், கிழக்கு மண்டல சுகாதார அலுவலர் மணிவண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று (29.09.2017) காலை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 36வது வார்டு பகுதியான கொடிசியா மைதானத்தின் அருகில் உள்ள கோவை இஸ்கான் கோவில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு கோவிலை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தூய்மை பாரத இயக்கத்தின் நோக்கமானது, தூய்மை பாரத இயக்கம் சார்ந்தப் பணிகளை அனைத்து நிலைகளிலும் ஒவ்வொரு இந்திய பிரஜையும், இப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து பொது மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ளாட்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், உள்ளுர் முக்கிய பிரமுகர்கள், தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர்கள் மூலம் பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

வீடுகள், சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும் துப்புறவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்பினரால் சுத்தமாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழச்சியில், கோவை மாவட்ட கிழக்கு மண்டல உதவி ஆணையர் ராம்குமார், கிழக்கு மண்டல சுகாதார அலுவலர் மணிவண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.